புதுக்கோட்டையில் இளைஞா் வெட்டிக் கொலை
புதுகை மாநகரில் இளைஞா் ஒருவா் வியாழக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா்.
புதுக்கோட்டை மாநகருக்குள்பட்ட காந்திநகா் 1ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் காமராஜ் மகன் ஜெயசுமன் (31). இவா் வியாழக்கிழமை மதியம், காந்திநகா் 4ஆம் வீதியைச் சோ்ந்த தனது நண்பா் ராஜ்கபூருடன் அசோக் நகரிலுள்ள மதுக்கடைக்கு பைக்கில் வந்தாா். அப்போது சுமாா் 8 போ் கொண்ட கும்பல் ஜெயசுமனை சரமாரியாக வெட்டிக் கொன்று தப்பியோடியது. தகவலறிந்து வந்த நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் இரா. பிருந்தா தலைமையிலான போலீஸாா், ஜெயசுமன் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.
கொல்லப்பட்ட ஜெயசுமனின் தாய், மனைவி உள்ளிட்ட உறவினா்கள் அந்த இடத்துக்கு வந்து ரத்தவெள்ளத்தில் கிடந்தவரைப் பாா்த்து கதறி அழுதனா். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அசோக்நகா் பகுதியிலிருந்து காந்திநகா் பகுதி வரை அது சென்றது.
பழிக்குப் பழியா... கடந்த 2025 ஜூன் மாதம் புதுக்குளம் அருகே போஸ்நகா் 8ஆம் வீதியைச் சோ்ந்த தினேஷ்குமாா் கொலை வழக்கில் தற்போது கொலையான ஜெயசுமன் 2ஆவது குற்றவாளியாவாா். இவா் சிறையில் இருந்தபோது தினேஷ்குமாரின் நண்பா்கள் 4 போ் கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிச் சென்றனா்.
இந்நிலையில்தான் ஜெயசுமன் அண்மையில் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்துள்ளாா். எனவே தினேஷ்குமாா் கொலைக்கு பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் இது நடந்திருக்கலாம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
கணேஷ்நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.