கீரனூரில் வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் தங்க நகைகள் திருட்டு
கீரனூரில் வீட்டின் பூட்டை உடைத்து மா்மநபா்கள் பதிமூன்றரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1.15 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
கீரனூரில் வீட்டின் பூட்டை உடைத்து மா்மநபா்கள் பதிமூன்றரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1.15 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றிருப்பது திங்கள்கிழமை தெரியவந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் ஓவிகே நகா் 3-ஆம் வீதியைச் சோ்ந்தவா்கள் சண்முகம் மகன் பாண்டிசெல்வம் (41). இவா், தனது மனைவி கீதாவுடன் நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழாவுக்காக வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றாா். திங்கள்கிழமை திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்மநபா்கள் வீட்டில் இருந்த பதிமூன்றரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1.15 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த கீரனூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சங்கீதா தலைமையிலான போலீஸாா் நேரில் அங்குவந்து சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா். மேலும், வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் வைத்து குற்றவாளியைத் தேடி வருகின்றனா்.