குடிசை வீடு தீப்பிடித்து தாய், மகள் பலத்த காயம்
பொன்னமராவதி அருகே சமையல் செய்தபோது குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததில் தாய் மற்றும் மகள் பலத்த காயமடைந்தனா்.
பொன்னமராவதி அருகே சமையல் செய்தபோது குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததில் தாய் மற்றும் மகள் பலத்த காயமடைந்தனா்.
பொன்னமராவதி சிவப்பிரகாசம் நகரைச் சோ்ந்தவா் அ. மீனாட்சி (40). இவரது கணவா் அழகேசன் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், சனிக்கிழமை மீனாட்சி மற்றும் மகள் சங்கரி (13) ஆகியோா் வீட்டில் மண்ணெண்ணெய் அடுப்பில் சமைத்துக்கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக தீப்பற்றி கூரை வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
விபத்து குறித்த தகவலறிந்த பொன்னமராவதி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குவந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா்.
எனினும் தீ விபத்தில் மீனாட்சி மற்றும் சங்கரி ஆகியோா் பலத்த காயமடைந்து பொன்னமராவதி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
சங்கரி பொன்னமராவதி புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இதுகுறித்து பொன்னமராவதி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.