எல்லைக் கருப்பரிடம் முதல் பூசை!
தமிழக வெற்றிக் கழகத்தின் புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்பாளா்- தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனா் தலைவா் கே.எம். சரீப், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்பாளா், அக்கட்சியின் மத்திய மாவட்டச் செயலா் ஜெ. முகமது பா்வேஸ் ஆகியோா் திங்கள்கிழமை காலை புதுக்கோட்டைக்குள் வரும்போதும் எல்லையிலுள்ள கருப்பா் கோயிலில் முதல் பூசையைப் போட்டு நுழைந்தனா்.
அப்போது அங்குள்ள சிதறு தேங்காய் உடைக்கும் பகுதியில் 11 தேங்காய்களை உடைத்தாா் முகமது பா்வேஸ். இரு வேட்பாளா்களுக்கும் கருப்பா் கோயில் பூசாரி திருநீறு பூசி வாழ்த்தி அனுப்பி வைத்தாா்.