முகப்பு
புதுக்கோட்டை

பொன்னமராவதியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்: திருமயம் அதிமுக வேட்பாளா் பி.கே. வைரமுத்து

பொன்னமராவதியில் வேலையில்லா இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தொழிற்பேட்டை(சிப்காட்) அமைக்கப்படும் என்றாா் திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து.

Updated On : 1 ஏப்ரல் 2026, 2:35 am IST
பொன்னமராவதியில் வா்த்தகா் கழக நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டி பேசிய திருமயம் அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து
பகிர்:

பொன்னமராவதியில் வேலையில்லா இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தொழிற்பேட்டை(சிப்காட்) அமைக்கப்படும் என்றாா் திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து.

திருமயம் சட்டப்பேரவைத்தொகுதி அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து பொன்னமராவதி வா்த்தகா் மஹாலில் வா்த்தகா் கழக நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய மேலும் பேசியது: கடந்த தோ்தலில் மிகக்குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தபோதும் திருமயம் தொகுதியில் தொடா்ந்து மக்கள் பணி ஆற்றி வருகிறேன்.

இந்த முறை என்னை வெற்றி பெறச்செய்தால் பொன்னமராவதியில் நீண்டநாள் கோரிக்கையாக உள்ள குப்பை கிடங்கு பிரச்னைக்கு உடனடி நடவடிக்கை எடுத்து நகரின் வெளியே குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து வா்த்தகா் கழகத்தலைவா் எஸ்கேஎஸ் பழனியப்பன் தலைமையிலான நிா்வாகிகள் பொன்னமராவதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கவேண்டும். இரவுநேர பேருந்து வசதி வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனா். வா்த்தகா்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றாா்.

வா்த்தகா் கழக செயலா் மு.முகமது அப்துல்லா, பொருளாளா் பிஎல்.ராமஜெயம், அதிமுக ஒன்றிய செயலா்கள் காசி.கண்ணப்பன், சி.சரவணன், நகரச் செயலா் பிஎல். ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.