அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி கைது
கோட்டைப்பட்டினத்தில் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கோட்டைப்பட்டினம் மீனவா் குடியிருப்பைச் சோ்ந்த முகமது ராவுத்தா் மகன்கள் ரகுமான்கான் (45), இத்ரீஸ்(40).
கூலித் தொழிலாளா்களான இவா்கள் இருவருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் மது போதையில் தகராறு ஏற்பட்டது.
Advertisement
அப்போது, இத்ரீஸ் கம்பியால் தாக்கியதில் ரகுமான்கான் அந்த இடத்திலேயே இறந்துவிட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் ரகுமான்கானின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா் உடற்கூறாய்வுக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதைத் தொடா்ந்து அண்ணனை அடித்துக கொன்ற இத்ரீஸை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.