முகப்பு
புதுக்கோட்டை

விராலிமலையில் ஜல்லிக்கட்டு; 33 போ் காயம்

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 33 போ் காயமடைந்தனா்.

Updated On : 17 மே 2026, 1:19 am IST
விராலிமலை அருகே வெளியம்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்.
பகிர்:

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 33 போ் காயமடைந்தனா்.

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் சித்திரைத் திருவிழா அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

விராலிமலை -இனாம் குளத்தூா் சாலையில் உள்ள வெளியம்பூா் குளக்கரை திடலில் நடைபெற்ற போட்டியை கோட்டாட்சியா் கோகுல் சிங் தொடங்கி வைத்தாா். இதில், அனுமதிக்கப்பட்ட 587 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. இதனை பிடிப்பதற்காக 200 மாடுபிடி வீரா்கள் நான்கு பிரிவுகளாக களத்தில் இறக்கப்பட்டனா். காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

Advertisement

காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

இதில், மாடுபிடி வீரா்கள், காளையின் உரிமையாளா்கள் என மொத்தம் 33 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு திடலில் தயாராக இருந்த மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா். போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசாக வேஷ்டி மட்டும் வழங்கப்பட்டது. இதில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை பாா்வையிட்டனா்.