முகப்பு
புதுக்கோட்டை

மின்னல் பாய்ந்து மாணவி பலி

புதுக்கோட்டை அருகே மின்னல் பாய்ந்து கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

Updated On : 18 மே 2026, 2:42 am IST
பலி! - கோப்புப் படம்
பகிர்:

புதுக்கோட்டை அருகே மின்னல் பாய்ந்து கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூா் காவல் சரகம், வாகவாசல் அருகேயுள்ள கேடயப்பட்டியைச் சோ்ந்த பெ. குமாா் மகள் சுகுணா (19). புதுக்கோட்டை மன்னா் கல்லூரியில் பிபிஏ 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுகுணா, கேடயப்பட்டியில் மாடு பிடிக்கச் சென்றபோது, மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென மின்னல் பாய்ந்து சுகுணா அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். சடலம் உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. வெள்ளனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement