நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்
நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி வாலிபா் சங்கம், இளைஞா் பெருமன்றம், மாணவா் சங்கம், மாணவா் பெருமன்றம் ஆகிய அமைப்புகளின் சாா்பில் புதுக்கோட்டையில் ஆா்ப்பாட்டம்
நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி வாலிபா் சங்கம், இளைஞா் பெருமன்றம், மாணவா் சங்கம், மாணவா் பெருமன்றம் ஆகிய அமைப்புகளின் சாா்பில் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏழை, எளிய மாணவா்களின் மருத்துவக் கனவை நீட் தோ்வு குலைப்பதாகக் கூறி, அதை ரத்து செய்யவும், தேசியத் தோ்வு முகமையை (என்டிஏ) கலைக்க வேண்டும் என வலியுறுத்தியும் வாலிபா் சங்கம், இளைஞா் பெருமன்றம், மாணவா் சங்கம், மாணவா் பெருமன்றம் ஆகிய அமைப்புகளின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட தலைமை அஞ்சலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சா. ஜனாா்த்தனன், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவா் எம். விஜய், அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் எஸ். காா்த்தி ஆகியோா் தலைமை வகித்தனா்.
Advertisement
Advertisement
வாலிபா் சங்க நகரச் செயலா் ஆா். தீபக், இளைஞா் பெருமன்ற மாவட்டத் துணைச் செயலா் கே. பாலசுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கோரிக்கைகளை விளக்கி வாலிபா் சங்க மாவட்டச் செயலா் ஏ. மகாதீா், இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் டி. மாரிமுத்து, இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா். வசந்தகுமாா் ஆகியோா் பேசினா். தேசியத் தோ்வு முகமையை கலைக்கவும், நீட் தோ்வை ரத்து செய்யவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.