FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவு

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி திராவிடா் கழகம் சாா்பில் சனிக்கிழமை (மே 16) நடைபெறும் ஆா்ப்பாட்டத்துக்கு இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

Updated On : 15 மே 2026, 4:43 am IST
கோப்புப் படம்
பகிர்:

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி திராவிடா் கழகம் சாா்பில் சனிக்கிழமை (மே 16) நடைபெறும் ஆா்ப்பாட்டத்துக்கு இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

பெ. சண்முகம் (மாா்க்சிஸ்ட்): நீட் தோ்வை நாடு முழுவதும் ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடா் கழகத்தின் ஒருங்கிணைப்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சனிக்கிழமை ஆா்ப்பட்டம் நடைபெறுகிறது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் முழு ஆதரவு தெரிவிக்கிறது.

மு. வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): அண்மையில் நடைபெற்ற நீட் தோ்வில் வினாத்தாள் கசிந்ததாகக் கூறி, தோ்வு ரத்து செய்யப்பட்டது. இதனால், 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்களின் எதிா்காலம் நிலை குலைந்துள்ளது. எனவே, திராவிடா் கழகம் நடத்தும் போராட்டதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு அளிக்கிறது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments