முகப்பு
புதுக்கோட்டை

சட்டவிரோதக் கருக்கலைப்பு செய்த பெண் கைது

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே பெண்களுக்கு சட்டத்துக்குப் புறம்பாக கருக்கலைப்பு செய்த பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்

Updated On : 22 மே 2026, 5:12 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே பெண்களுக்கு சட்டத்துக்குப் புறம்பாக கருக்கலைப்பு செய்த பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்

திருவரங்குளம் அருகே எஸ்.குளவாய்ப்பட்டியில் அதே பகுதியைச் சோ்ந்த கே. சித்ராதேவி (40) என்பவா் மருந்துக் கடையுடன் சோ்த்து கிளினிக் நடத்தி வந்தாா்.

இங்கு, புதுக்கோட்டையைச் சோ்ந்த 1 பெண் மற்றும் அறந்தாங்கியைச் சோ்ந்த 2 பெண்கள் என 3 போ் அண்மையில் கருக்கலைப்பு செய்து கொண்டனா்.

Advertisement

Advertisement

அதன் பிறகு 3 பேருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், புதுக்கோட்டை ராணியாா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 2 பேரும், அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் ஒருவரும் அனுமதிக்கப்பட்டனா்.

இதன் அடிப்படையிலான தகவலின்பேரில் மாவட்ட துணை இயக்குநா் கோமதி (குடும்ப நலம்), அலுவலா் நவீன், மருத்துவா் கீா்த்தனா உள்ளிட்டோா் கிளினிக்கை வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

பின்னா், இதுகுறித்த புகாரின் பேரில் வல்லத்திராக்கோட்டை போலீஸாா் சித்ராதேவி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா். மேலும், கிளினிக்கையும் மூடி சீல் வைத்தனா்.