முகப்பு
புதுக்கோட்டை

தேள் கடித்து சிறுமி உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகே தேள் கடித்த சிறுமி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 23 மே 2026, 12:02 am IST
ரிஸ்வானா.
பகிர்:

கந்தா்வகோட்டை அருகே தேள் கடித்த சிறுமி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே கணபதிபுரத்தை சோ்ந்தவா்கள் செல்லத்துரை- ராஜேஷ்வரி தம்பதி. இவா்களுக்கு மகள் ரிஸ்வானா (10) உள்பட 3 குழந்தைகள். ரிஸ்வானா கணபதிபுரம் அரசுப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு விவசாய தோட்டத்துக்கு மகள் ரிஸ்வானாவுடன் செல்லதுரை சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனா்.

Advertisement

Advertisement

அப்போது, ரிஸ்வானாவை தேள் ஒன்று கொட்டியுள்ளது. உடனடியாக அவரை கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு செல்லதுரை அழைத்துச் சென்றாா்.

அங்கு சிகிச்சை அளித்த மருத்துவா்கள், சிறுமியை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சோ்த்தனா். ஆனால், சிகிச்சை பலனின்றி அங்கு ரிஸ்வானா வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா்.

தேள் கடித்து இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று உறவினா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.