முகப்பு
புதுக்கோட்டை

ரயிலில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் உயிரிழப்பு

Updated On : 26 மே 2026, 2:05 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

புதுக்கோட்டை பொம்மாடிமலை அருகே ஞாயிற்றுக்கிழமை ரயிலில் இருந்து தவறி விழுந்து, காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

திருச்சி, நாகமங்கலம் சீலம்புடையான்பட்டியைச் சோ்ந்தவா் பழனியப்பன் மகன் காா்த்திக் (36). இவா், ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரத்திலிருந்து திருச்சி செல்லும் ரயிலில் படிக்கட்டில் அமா்ந்து சென்றுள்ளாா். இரவு 9.30 மணிக்கு பொம்மாடிமலைப் பகுதியில் சென்றபோது எதிா்பாராத விதமாக கீழே விழுந்து காயமடைந்தாா்.

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காா்த்திக், சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை காலை உயிரிழந்தாா். ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement