கும்பகோணத்தில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.
கும்பகோணம் அரசலாறு வழிநடப்பு பிர்மன்கோயில் லயன் கரையைச் சேர்ந்தவர் ஆர். சபரிநாதன் (31). இவரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெ. மகேஷ் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ்
சிறையில் அடைக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை அண்மையில் ஆணையிட்டார்.
இதன் பேரில், சபரிநாதனை போலீஸார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.