தஞ்சாவூர்

மத்திய அரசைக் கண்டித்து எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

DIN

மத்திய அரசைக் கண்டித்து கும்பகோணம் தலைமை அஞ்சல் நிலையம் முன் எஸ்டிபிஐ கட்சியினர் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் அப்துல்காதர் தலைமை வகித்தார். மாவட்டத் தொகுதி பொறுப்பாளர்கள் இப்ராஹிம், ஜவகர்அலி, செரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது பசுப் பாதுகாவலர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்வோர் முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் என நூற்றுக்கணக்கான குடும்பங்களை பாஜக அரசுகளின் துணையோடு அழித்து விட்டனர். பல அப்பாவிகளை அடித்துக் கொல்வதின் மூலம் முஸ்லிம்கள் மற்றும் பிற சமூக மக்களின் மனதில் பீதியை ஏற்படுத்தும் சதித்திட்டத்தின் விளைவே இது.
இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 20 பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலர் ஹாஜா வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT