தஞ்சாவூர்

கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

DIN

தஞ்சாவூரில் மதர் தெரசா பவுண்டேசன் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் 3 பேருக்கு நிகழ் பருவக் கட்டணமாக ரூ. 65 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வழங்கினார்.
விழாவுக்கு பவுண்டேசன் தலைவர் ஏ.ஆர். சவரிமுத்து தலைமை வகித்துப் பேசுகையில், கல்வி உதவித் திட்டத்தின் கீழ் நிகழாண்டில் 571 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
விழாவில் பவுண்டேசன் அறங்காவலர்கள் கோவிந்தராஜு, முரளிகிருஷ்ணன், சம்பத் ராகவன், திட்ட இயக்குநர் ரத்தீஸ் குமார், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மெர்சி, ஜெரோம், மக்கள் தொடர்பு அலுவலர் ரோசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT