தஞ்சாவூர்

விவசாயத் தொழிலாளர்கள் விண்ணப்ப இயக்கம்

DIN

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிராம நிர்வாக அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை விண்ணப்ப இயக்கம் நடத்தினர்.
தஞ்சாவூர் அருகே கொடிக்காலூர், திட்டை கிராம நிர்வாக அலுவலகங்களில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி. கிருஷ்ணன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் டி. கணேசன், விவசாயிகள் சங்க அமைப்பாளர் ஜி. ராமலிங்கம் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.
இந்த மனுக்களில் குடியிருப்பு பட்டா கோருதல், மின் விளக்கு சீர் செய்தல், குடிநீர், புதை சாக்கடை வசதி கோருதல், மதுக்கடை அகற்றுதல், பேருந்து, சாலை வசதி, அத்தியாவசிய பண்டங்களை அங்காடிகளில் வழங்குதல் உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

புரட்சிகர மாா்க்கிஸ்ட் கட்சி மாநில குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT