தஞ்சாவூர்

பாபநாசம் அருகே குடிசை வீட்டில் தீ

DIN

பாபநாசம் அருகே வழுத்தூர், பூக்கொல்லை காலனித் தெருவைச் சேர்ந்தவர் செல்வமூர்த்தி (35),மாற்றுத்திறனாளி. இவர் தனது குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை மாலை இவரது வீட்டருகேயுள்ள சீமைக் கருவேலமரங்களை வெட்டித் தீவைத்தனர். அப்போது அதிலிருந்து காற்றில் கிளம்பிய தீப்பொறி அருகிலிருந்த செல்வமூர்த்தியின் வீட்டில் விழுந்து தீப்பிடித்தது. தகவலின்பேரில் வந்த பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான வீரர்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த விபத்தில் ரூ. 10 ஆயிரம் மதிப்பில் சேதமானதாகக் கூறப்படுகிறது. அய்யம்பேட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT