தஞ்சாவூர்

ஒரத்தநாடு அருகே குடும்பத் தகராறில் மனைவி வெட்டிக் கொலை

DIN

ஒரத்தநாடு அருகே வியாழக்கிழமை மனைவியை வெட்டி கொலை செய்த கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பாப்பாநாடு அருகே உள்ள சோழகன் குடிக்காடு தெற்குத் தெருவை சேர்ந்தவர் ரெங்கசாமி (55). இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்நிலையில், வியாழக்கிழமை ரெங்கசாமிக்கும் அவரது இரண்டாவது மனைவி வெள்ளையம்மாளுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரெங்கசாமி வெள்ளையம்மாளை அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதில்  பலத்த காயம் அடைந்த வெள்ளையம்மாள் ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து வெள்ளையம்மாளின் மகன் முருகானந்தம் பாப்பாநாடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஒரத்தநாடு காவல் ஆய்வாளர் ஜெகதீஸ்வரன், பாப்பாநாடு   உதவி காவல் ஆய்வாளர்  ராஜேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ரெங்கசாமியை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT