தஞ்சாவூர்

பாஜகவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

DIN

பழிவாங்கும் பாஜக அரசின் போக்கைக் கண்டித்து தஞ்சாவூர் ரயிலடியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிபிஐயை பயன்படுத்தி பாஜகவினர் மிரட்டும் போக்கைக் கைவிடக் கோரியும், அவதூறு அரசியல் நடத்தும் பாஜக அரசைக் கண்டித்தும், பழிவாங்கும் போக்கை பாஜக அரசு கைவிட வலியுறுத்தியும், ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் போக்கை கைவிடக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் நாஞ்சி கி. வரதராசன், செங்குட்டுவன், துணைத் தலைவர்கள் எஸ்.ஆர்.வாசு, பழனிவேலு, ராஜு, பாரத்மோகன், பொருளாளர் பழனியப்பன், பட்டதாரி அணி லட்சுமி நாராயணன், சிறுபான்மை பிரிவு காலித் அகமது, செயலர் அலாவுதீன், ஐஎன்டியுசி ஆரோக்கியதாஸ், மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலர் ரேவதி ஷாக்கீலோ, மாவட்டத் தலைவர் சித்ரா பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

SCROLL FOR NEXT