தஞ்சாவூர்

மேலசெம்மங்குடியில் அம்மா திட்ட முகாம்

DIN

பாபநாசம் வட்டம், மேலசெம்மங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் பாபநாசம் மண்டல துணை வட்டாட்சியர்கள் லோ. சுந்தரமூர்த்தி, சண்முகம், வருவாய் அதிகாரி பிராங்ளின் உள்ளிட்ட குழுவினர், பொதுமக்களிடமிருந்து வீட்டு மனைப் பட்டா, பட்டா மாறுதல், முதியோர், விதவை, மாற்றுத்திறனாளி உதவி தொகை, சிறு, குறு விசாயிகளுக்கான சான்றிதழ் உள்ளிட்ட இனங்கள் தொடர்பான கோரிக்கை மனுக்களை பெற்றனர். முறையான மனுக்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டன. முகாமில் ஊராட்சி முன்னாள் தலைவர் முருகானந்தம், கிராம நிர்வாக அதிகாரிகள் மணிமாறன், ராஜேஷ், செல்வராணி, விஜயலெட்சுமி, சுகந்தி, கார்த்தி, பாண்டியன், கண்ணன், சுந்தர்ராஜன், தரணீதரன் மற்றும் கிராம உதவியாளர்கள், ஊராட்சி பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

SCROLL FOR NEXT