அதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை-1 சார்பில், அதிரை அண்ணா காலனியில் வசிக்கும் நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பிலான 3 சக்கர சைக்கிளை கிளை நிர்வாகிகள் திங்கள்கிழமை வழங்கினர்.
நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் நவாப்ஷா, செயலர் ஹைதர் அலி, பொருளாளர் அல்லா பிச்சை, துணைச் செயலர் அ.மு.அப்துல் வஹாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.