வீடு புகுந்து 5 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி திருட்டு
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே ராஜாமடம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் அதே ஊர் கூட்டுறவு சங்கத் தலைவர்
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே ராஜாமடம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் அதே ஊர் கூட்டுறவு சங்கத் தலைவர் த.ராஜேந்திரன் (60). செவ்வாய்க்கிழமை இவர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் அலமாரியிலிருந்த 5 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.3,000 ரொக்கம், வீடு மற்றும் நிலப் பத்திரங்கள், இறால் பண்ணை உரிமம், வாரிசுச் சான்று ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனராம். இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.