திருப்பாலைத்துறை சிவன் கோயிலில் அஷ்டமி பூஜை
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை கிராமத்தில் அருள்பாலித்து வரும் தவளவெண்ணகை அம்மன் உடனுறை
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை கிராமத்தில் அருள்பாலித்து வரும் தவளவெண்ணகை அம்மன் உடனுறை பாலைவனநாதர் கோயிலில் உள்ள இரட்டை பைரவருக்கு பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை அஷ்டமிபூஜை நடைபெற்றது.
இதையொட்டி இரட்டை பைரவர்களுக்கு எண்ணெய், பால், தேன், இளநீர்,சந்தனம்,பழரசம், பன்னீர் உள்ளிட்ட மங்கள பொருள்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, தூப,தீப,நெய்வேத்ய வழிபாடுகள் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மிளகு முடிச்சு தீபமேற்றி வழிபட்டனர். அப்பர் சேவாலயம் பரமசிவம்,வி.பி.கே. மூர்த்தி,பி.எஸ்.என்.எல். பாலசுந்தரம், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.