முதல்வர் நடவடிக்கை எடுக்கிறார்: அமைச்சர் துரைக்கண்ணு பேட்டி
காவிரி மேலாண் மை வாரியத்தை அமைக்கச் செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றார் வேளாண் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு.
காவிரி மேலாண் மை வாரியத்தை அமைக்கச் செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றார் வேளாண் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு மத்திய அரசுக்கு எந்த வகையில், எந்த முறையில் அழுத்தம் கொடுக்க வேண்டுமோ, அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழுத்தம் கொடுத்து வருகிறார். இதுவரை இல்லாத அளவுக்குத் தமிழக அரசு சீரிய முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றார் அவர்.