திருவையாறு அருகே சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்த தொழிலாளியை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
திருவையாறு அருகேயுள்ள பவனமங்கலம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கே. கெளதமன் (38). கூலி தொழிலாளி. இவர் 17 வயது சிறுமியைக் கட்டாயப்படுத்தி பாலியல் வல்லுறவு செய்தார்.
இதனால், அச்சிறுமி கர்ப்பமடைந்தார். இதுகுறித்து திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து கெளதமனை வியாழக்கிழமை கைது செய்தனர்.