தஞ்சாவூர்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்

DIN

பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இயங்கி வரும் சத்துணவு மையங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தின் கீழ் சத்துணவு மையங்களில் நடவு செய்வதற்காக  சத்துணவு அமைப்பாளர்களிடம் மரக்கன்றுகள் வழங்கும்  நிகழ்ச்சி  திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பாலமுரளி முன்னிலையில் பாபநாசம் ஒன்றியத்துக்குட்பட்ட சத்துணவு மையங்களை சேர்ந்த சத்துணவு அமைப்பாளர்களிடம் முருங்கை, பப்பாளி உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. 
இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT