தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூரை அடுத்த பெரியக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் சந்தோஷ்ராஜா (17). இவர் பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதியிலுள்ள தனியார் மெட்ரிக். பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
இந்நிலையில், இவர் திங்கள்கிழமை பிற்பகல் வீட்டு மாடியிலுள்ள மின்விசிறியில் கயிற்றால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாணவரின் தந்தை அளித்த புகாரின்பேரில், மதுக்கூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இதனிடையே, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மாணவர் சந்தோஷ்ராஜாவின் சடலம்
செவ்வாய்க்கிழமை பிற்பகல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.