தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் இரவு நேரத்தில் சுற்றித் திரிந்த 8 பேர் கைது

DIN

பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வீரையன் தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து சென்றனர். அப்போது மணிக்கூண்டு பகுதியில் 8 பேர் சுற்றித் திரிந்து கொண்டிருந்தனராம்.
சந்தேகத்தின் பேரில் அவர்களைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் அவர்கள், பட்டுக்கோட்டை மயில்பாளையம் ஆர்.சுந்தரமூர்த்தி (21), கரிக்காடு பி.விஜயராகவன் (30), மதுக்கூர் டி.கார்த்தி (24), பட்டுக்கோட்டை கண்டியன் தெருவைச் சேர்ந்த பி.கார்த்தி (23), பி.நாடிமுத்து (23), ஜி.மணிகண்டன் (29), கே.கார்த்திகேயன் (29), சீனிவாசபுரம் என்.கார்த்தி (22) என்பது தெரிய வந்தது. மேலும் விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் நகரில் குற்றச் செயல்களில் ஈடுபட சுற்றித் திரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் 8 பேரையும் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT