வீட்டின் பின்பக்க பூட்டை உடைத்து ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள பூஜைபொருள்கள் திருட்டு
கும்பகோணம் அருகே வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள பூஜைபொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கும்பகோணம் அருகே வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள பூஜைபொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கும்பகோணம் அருகே பந்தநல்லூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (56). விவசாயி. இவரது மனைவி சொர்ணலதா. இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள வெள்ளியால் ஆன ராமர், சீதா தேவி, லட்சுமணர் சிலைகள், பூஜை பொருள்கள், தங்க நகைகளை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. தம்பதி காலையில் எழுந்து பார்த்தபோதுதான் வீட்டில் திருட்டு நடைபெற்றது தெரியவந்தது. இதுகுறித்து கிருஷ்ணசாமி அளித்த புகாரின் பேரில், பந்தநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து, பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.