தஞ்சாவூர்

நாகை மாவட்டத்துக்கு  1000 உணவுப் பொட்டலங்கள் அனுப்பிவைப்பு

DIN

பாபநாசம் வட்டம், பண்டாரவாடையிலிருந்து மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்துக்கு 1000 உணவுப் பொட்டலங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில்,  அந்த கட்சியின் மாநில வர்த்தகர் அணி செயலாளர் யூசுப்ராஜா தலைமையில் உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இதில்,  மாநில செயலாளர் ராசுதீன், மாவட்ட செயலாளர் மஃக்ரூப்,  ஒன்றிய செயலாளர் முகம்மது இப்ராஹீம்,  கிளை நிர்வாகிகள் முகம்மது பாசில், சஃபீக் அகம்மது, முகம்மது மகாதீர், ரியாஸ்கான், முகம்மது பஹத், சமூக ஆர்வலர் ஓம் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
தயாரிக்கப்பட்ட 1000 உணவுப் பொட்டலங்கள், குடிநீர் உள்ளிட்டவை வாகனங்கள் மூலம் நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதி முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT