தஞ்சாவூர்

ராஜகிரியில் மீலாது விழா பேரணி

DIN

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், ராஜகிரியில் மீலாது விழாவையொட்டி பேரணி  புதன்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவில்  ராஜகிரி அனைத்து பள்ளிவாசல்களின் நிர்வாகிகள்,உறுப்பினர்கள், ஜமாத் பெருமக்கள், இமாம்கள், மாணவர்கள் உள்ளிட்ட 300- க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. ராஜகிரி பெரிய பள்ளிவாசல் வளாகத்திலிருந்து புறப்பட்டு  தனியார் திருமண மஹாலில் நிறைவடைந்தது. அங்கு சென்னை பாலவாக்கம் மஸ்ஜித் மஹ்மூத் தலைமை இமாம் ஏ.யு. அபூபக்கர்  உஸ்மானி பங்கேற்று மீலாது விழாவின் சிறப்புகள் பற்றி பேசினார். ராஜகிரி பெரிய பள்ளிவாசல் தலைவர் ஆர்.ஏ. நூர்முகம்மது, செயலர் என்.ஏ.எம். யூசுப் அலி,துணை செயலர் ஆர்.ஹெச். முகம்மது காசீம், ஆலோசகர் அப்துல் லத்தீப் மிஸ்பாஹி, கீழ பள்ளிவாசல் துணை செயலர் அஷ்ரப் அலி,ராஜகிரி காசிமியா,ஜமாலியா  சமூக நலச் சங்க நிறுவனர் கே. முபாரக் உசேன்,நிர்வாகி சிக்கந்தர் பாட்சா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

SCROLL FOR NEXT