தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் நிர்வாகிகள் பதவியேற்பு விழா சங்க அலுவலக கட்டட வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில் ஆதனூர் என்.குமார் இரண்டாவது முறையாக சங்கத்தின் தலைவராக பதவியேற்றுக் கொண்டார். துணைத் தலைவராக ஏ. ஜாஹீர் உசேன், சங்க இயக்குநர்களாக எம். கருணாநிதி, சா. வீரமணி, க. கணேசன், செ. செல்வகுமாரி, பா. பரமேஸ்வரி, க.பிரியலெட்சுமி, ந. ஜீவகுமார், செ. சாமிநாதன், கோ. ஆல்பர்ட் தாமஸ் உள்ளிட்டோரும் பதவியேற்றுக் கொண்டனர்.
பதவியேற்றுக் கொண்ட அனைவருக்கும் கூட்டுறவு சங்க மேலாண் இயக்குநர் கே.வி. ராஜேந்திரன், சங்க செயலாளர் என். ராஜேந்திரன் உள்ளிட்டோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.
நிகழ்ச்சியில், பாபநாசம் கூட்டுறவு நகர வங்கித் தலைவர் ஆர். சபேசன், வங்கி இயக்குநர்கள் எம்.ஆர். பாலகிருஷ்ணன், கோ.வி. சின்னையன், பாபநாசம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆர். விஜகுமார், பாபநாசம் அரசு வழக்குரைஞர் ஜி. சரவணன் மற்றும் சங்க அலுவலக அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.