தஞ்சாவூர்

"உலகளவில் பழங்குடியினர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம்'

DIN

உலக அளவில் பழங்குடியினரின் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிக அளவில் உள்ளது என்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பழங்குடி மக்கள் ஆய்வு மையத்தின் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கம், இசை நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் செ. சுப்பிரமணியன் பேசியது:
உலக அளவில் பழங்குடியினரின் மக்கள்தொகை இந்தியாவில் அதிகமாக உள்ளது. இந்தியாவில் உள்ள 250 பழங்குடிப் பிரிவினர் 150 மொழிகள் பேசுகின்றனர். இவர்கள் இமயமலை, அரபிக்கடலினுடைய கிழக்குப் பகுதியான கேரளம், கர்நாடகம், நீலகிரி, கொடைக்கானல், திருச்சி பகுதியில் உள்ள கொல்லி மலைகள் போன்ற இடங்களில் வாழ்கின்றனர். பழங்குடியினரின் கலாசாரம் தனித்துவம், பாரம்பரியம் மிக்கது.  தற்போது பழங்குடியினர் இன்றைய கிராமப் பகுதியிலும் வாழ்கின்றனர். தமிழ்நாட்டு நகர்ப்புறங்களில் 9.6 சதவீத பழங்குடியினர் வசிக்கின்றனர். அவர்களுடைய படிப்பறிவு விகிதம் 46.7 சதவீதம். தமிழகத்தில் அவர்களுடைய மக்கள்தொகை 7.9 லட்சமாக உள்ளது என்றார் சுப்பிரமணியன்.
துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் சி. ராஜேந்தின் பேசியது: தோல் கருவி, துளை கருவி, நரம்பு கருவி, கஞ்சக் கருவிகள் என நான்கு வகையான இசைக் கருவிகள் உள்ளன.  தோலால் போர்த்தப்பட்டு கயிற்றால் இறுக்கமாகக் கட்டப்பட்ட கருவி தோல் கருவி. துளைக் கருவி என்பது மூங்கில் மரத்தில் துளையிட்டு அதன் வழியாகக் காற்று செலுத்தி ஒலியை எழுப்பக்கூடியது. நரம்புக் கருவிகள் என்பது நரம்புகளை இழுத்துக்கட்டி அதன் மூலம் ஒலியை எழுப்பக்கூடிய யாழ், வீணை, தம்புரா போன்றவை. கஞ்சக் கருவிகள் என்பது உலோகத்தால் ஆன இரு தட்டுகளை மோதி, அதனால் ஒலி எழுப்புவதுதான் இந்தக் கஞ்சக் கருவி. அவை தாளம், தப்பாட்டம் போன்றவை என்றார் ராஜேந்திரன்.    
பின்பு கோவை நிமிர்வு பறை இசைக் கலைஞர்களின் பறை, பரதம், துடும்பாட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் பதிவாளர் ச. முத்துகுமார், மொழிப் புலத் தலைவர் இரா. முரளிதரன், பழங்குடி மக்கள் ஆய்வு மையத் தலைவர் பெ. இளையாப்பிள்ளை, உதவிப் பேராசிரியர் எம்.ஏ. சிவராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 9,141 போ் எழுதினா்

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

SCROLL FOR NEXT