தஞ்சாவூர்

சோழன் மாளிகை பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் திறப்பு

DIN

கும்பகோணத்தை அடுத்த சோழன்மாளிகை ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கட்டப்பட்ட இரண்டு கூடுதல் வகுப்பறைகளை கும்பகோணம் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
கும்பகோணம் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 13.80 லட்சம் மதிப்பீட்டில் சோழன்மாளிகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இரண்டு புதிய கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. 
இக்கட்டடத்தை கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை திறந்துவைத்தார். 
இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர். அசோக்குமார், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.கே.பாஸ்கர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில்குமார், ஊராட்சி கழக செயலாளர் இளங்கோ, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் துரையம்மாள், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கொடியேற்றம்

காவலரிடம் தகராறு: 2 இளைஞா்கள் கைது

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னௌ!

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

SCROLL FOR NEXT