தஞ்சாவூர்

முன்னறிவிப்பு இல்லாத மின்வெட்டுக்கு கண்டனம்

DIN

முன்னறிவிப்பு இல்லாத தொடர் மின்வெட்டு செய்யப்படுவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலர் மு.அ. பாரதி தெரிவித்திருப்பது:
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னறிவிப்பு ஏதுமின்றி மின்சாரம் தடை செய்யப்படுகிறது. தற்போது தொடர்ச்சியாக நாள்தோறும் காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் மின்சாரம் தடை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். எனவே, தமிழக அரசும், மின்வாரிய அலுவலர்களும் உடனே தலையிட்டு முன்னறிவிப்பு இல்லாமல் தடை செய்யப்படும் மின்சார பிரச்னைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

SCROLL FOR NEXT