தஞ்சாவூர்

கேரள மக்களுக்காக திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள்

DIN

கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தஞ்சாவூரில் இருந்து திமுக தெற்கு மாவட்டம் சார்பில் நிவாரணப் பொருட்கள் சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
இதில், அரிசி 4,915 கிலோ, பால் பவுடர் 50 பாக்கெட்கள், கோதுமை 50 கிலோ, கைலிகள், போர்வைகள், சேலைகள், நைட்டிகள், தலையணைகள், துண்டுகள், சட்டைகள், வேட்டிகள் என மொத்தம் 24 பொருட்கள் வேனில் அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றை தெற்கு மாவட்டச் செயலர் துரை. சந்திரசேகரன் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமைக் குழு உறுப்பினர் து. செல்வம், மாநகரச் செயலர் டி.கே.ஜி. நீலமேகம், துணைச் செயலர் நீலகண்டன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சண். ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT