தஞ்சாவூர்

தூய்மை இந்தியா இயக்க உறுதிமொழி ஏற்பு

DIN


பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை இந்தியா இயக்க முன்னெடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் தூய்மை இந்தியா இயக்க  திட்டத்தின் நான்காம் ஆண்டு நிறைவையொட்டி பொதுமக்கள் பங்களிப்புடன்  தூய்மை இந்தியா இயக்க தன்னார்வ தொண்டு தொடர்பாக  உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ். சடையப்பன் தலைமை வகித்தார். கிராம ஊராட்சிகள் ஆணையர் த. குமரவடிவேல் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு, நமது தேசத்தை தூய்மையாக வைத்திருக்க முயற்சி செய்வேன்; அதற்காக நேரத்தை ஒதுக்குவேன். காந்தி கண்ட வளர்ச்சியடைந்த தூய்மை இந்தியா உருவாக பாடுபடுவேன் என்று  உறுதிமொழி ஏற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT