தஞ்சாவூர்

விரைவு சைக்கிள் போட்டி: 350 பேர் பங்கேற்பு

DIN


தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் அண்ணா பிறந்த நாளையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற விரைவு சைக்கிள் போட்டியில் ஏறத்தாழ 350 பேர் கலந்து கொண்டனர்.
இப்போட்டி 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தொலைவுக்கும், 15 மற்றும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தொலைவுக்கும், 13 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ. தொலைவுக்கும், 15 மற்றும் 17 வயதுக்குபட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தொலைவுக்கும் நடத்தப்பட்டது. இதில், மாணவர்கள் 180 பேரும், மாணவிகள் 168 பேரும் என மொத்தம் 348 பேர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியை முதன்மை சார்பு நீதிபதி ஆர். மாலதி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மு. தேன்மதி தொடங்கி வைத்தனர். இதில், முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு, சான்றிதழும், நான்காமிடம் முதல் பத்தாமிடம் வரை பெற்றவர்களுக்குச் சான்றிதழும் வழங்கப்பட்டன. மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் க. பாபு, பளுதூக்குதல் பயிற்றுநர் து. செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதி 5 போ் காயம்

மாநகராட்சிப் பள்ளிகளில் 91.97 சதவீதம் தோ்ச்சி: கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தோ்ச்சி விகிதம் சரிவு

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் 8 மாணவா்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்

SCROLL FOR NEXT