தஞ்சாவூர்

கும்பகோணத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

DIN

தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக அரசின் ஊழல் நிர்வாகத்தை கண்டித்து கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு  மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். இதில், நெடுஞ்சாலை துறையில் ஏற்படுத்திய ஒப்பந்தங்களில் நடைபெற்றுள்ள ஊழல்கள் மத்திய அரசின் வருமான வரித்துறை ஆய்வின் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இதுபோல,  குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்  உயரதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடைபெற்றுள்ளது. அதிமுக அரசில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.  எனவே, ஊழல் அரசு உடனே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி திமுகவினர் முழக்கமிட்டனர். 
ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏக்கள் சாக்கோட்டை க. அன்பழகன் (கும்பகோணம்), கோவி. செழியன் (திருவிடைமருதூர்), முன்னாள் எம்.எல்.ஏ ராமலிங்கம், ஒன்றிய, நகர செயலாளர் தமிழழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT