தஞ்சாவூர்

பாபநாசம் அருகே தீவிபத்தில் கூரைவீடு சேதம்

DIN


பாபநாசம் அருகே தொழிலாளி வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் கூரைவீடு முழுவதும் தீக்கிரையாயின.
பாபநாசம் அருகே கிழக்கு மாத்தூர் ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த தொழிலாளி ஜெயராமன்(65), வெள்ளிக்கிழமை இரவு கூரை வீட்டை பூட்டி விட்டு கடைவீதிக்கு சென்றார்.
அப்போது, கூரை வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ அருகிலிருந்த மாட்டு கொட்டகைக்கும் பரவியது. இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் மாட்டுக் கொட்டகையிலிருந்த மாடுகளை அவிழ்த்து காப்பாற்றினர்.
மேலும் தீ பரவாமல் இருக்க தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் வீட்டிலிருந்த வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து போனது. இதுகுறித்து அய்யம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT