பட்டுக்கோட்டையை அடுத்த வெண்டாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி டி.டேவிட் செல்வராஜ் (45).
இவர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தனது குடிசை வீட்டின் கூரையை தார்ப்பாயால் மூடி கட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் கூரையில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் தலையின் பின்புறம் பலத்த காயமடைந்த டேவிட் செல்வராஜ் உடனடியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (ஏப்.24) அதிகாலை டேவிட் செல்வராஜ் இறந்தார். இதுகுறித்து அவர் மனைவி சாந்திமேரி அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.