தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டையில் வரும் செவ்வாய்க்கிழமை (ஆக. 6) மின்சாரம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் சார்பில் பாபநாசம் உதவி செயற்பொறியாளர் கே. சங்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் நடக்கும் பராமரிப்பு பணிகளால் அய்யம்பேட்டை, வழுத்தூர், பசுபதிகோவில்,வீரசிங்கம்பேட்டை,ராமாபுரம்,வயலூர், கணபதியக்ரஹாரம், மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.