தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில்  ஓய்வூதியர் சங்கக் கூட்டம்

DIN

பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின்  வட்டக்கிளைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத் தலைவர் என்.சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலர் டி.மோகன்தாஸ், இணைச் செயலர் கே.பொன்முடி, பொருளாளர் ஆர்.சிவசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முறையாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும். விடுபட்ட சங்க உறுப்பினர்களுக்கு அரசு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்.பொதுமக்கள் நலன் கருதி பட்டுக்கோட்டை அண்ணா நகர் பகுதியில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன. நிறைவில்,  செயற்குழு உறுப்பினர் எம். தனபதி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புனித செபஸ்தியாா் ஆலய கொடியிறக்கம்

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மாடித்தோட்ட பயிற்சி

மன்னாா்குடியில் மின் பாதுகாப்பு வகுப்பு

கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பொறுப்பேற்பு

ஆசிரியா்களுக்கு நலவாரியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT