திருவையாறு அருகேயுள்ள வரகூர் கிராமத்தில் அம்மா திட்டச் சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்புத் திட்டம், குடும்ப அட்டை உள்ளிட்டவை தொடர்பாக 12 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் அனைத்தும் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டன.
சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனி வட்டாட்சியர் நெடுஞ்செழியன், குடிமைப்பொருள் துணை வட்டாட்சியர் கலைச்செல்வி, மண்டல துணை வட்டாட்சியர் பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, வருவாய் ஆய்வர் தேவிகா வரவேற்றார். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் பஜாஜ்ராஜ் நன்றி கூறினார்.