திருவையாறில் தமிழிசை மன்றம் சார்பில் மூன்று நாட்களாக நடைபெற்று வந்த 48 ஆம் ஆண்டு தமிழிசை விழா வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது.
இந்த விழா ஜன. 15-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து இசை, பாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
நிறைவு நாளான வியாழக்கிழமை மாலை திருவையாறு ராம வேலாயுதம், பழனிநாதன், செளரிநாதன் ஆகியோரின் திருமுறை இசை, சென்னை திருவான்மியூர் விஜயலெட்சுமி சுப்பிரமணியத்தின் பாட்டு, திரைப்பட பின்னணி பாடகி ஜெயஸ்ரீ குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி, தஞ்சாவூர் டி.ஆர். கோவிந்தராஜனின் லயநாத இன்ப நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு நிறைவு விழா, தொடர்ந்து மதுரை கோவிந்தராஜ் குழுவினரின் நாட்டுப்புற ஆடல், பாடல் கிராமிய நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.