தஞ்சாவூர்

கும்பகோணத்தில் அரிசி கடையில் திருட்டு

DIN

கும்பகோணம் துக்காம்பாளையத் தெருவை சேர்ந்தவர் லெட்சுமணன் மகன் செல்வராஜ் (39). இவர் கும்பகோணம் இந்திராகாந்தி சாலையில் அரிசி கடை நடத்தி வருகிறார்.
இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். திங்கள்கிழமை காலை வந்து பார்த்தபோது கடையின் ஷட்டரிலிருந்த பூட்டுகள் திறக்கப்பட்டு  கடை திறந்து கிடந்தது. 
கடையினுள் சென்று பார்த்தபோது, கடையிலிருந்த பணப்பெட்டியை உடைத்து அதிலிருந்த ரூ. 30 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. சம்பவம் குறித்த புகாரின்பேரில் கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT