தஞ்சாவூர்

வட்டியில்லா பயிர்க் கடன் ரூ.311 கோடிக்கு வழங்க இலக்கு

DIN


தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 2019 - 20 ஆம் ஆண்டில் வட்டியில்லா பயிர்க் கடன் வழங்க ரூ. 311 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது: தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது உழவுப் பணிகளைச் செம்மையுறச் செயல்படுத்தும் விதமாக தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலமாக 243 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் வட்டியில்லா பயிர்க் கடன் தமிழக அரசால் 2018 - 19 ஆம் ஆண்டில் ரூ. 252 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, ரூ. 254 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
2019 - 20 ஆம் ஆண்டுக்கு ரூ. 311 கோடிக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகப் பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தொடர்புடைய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி பயன் பெறலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT