தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருகே மொபெட் மீது கார் மோதியதில் தம்பதி சாவு

DIN

தஞ்சாவூர் அருகே வெள்ளிக்கிழமை மொபெட் மீது கார் மோதியதில் கணவன் - மனைவி உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் அருகே தொண்டராயம்பாடியைச் சேர்ந்தவர் ஆர். ஜெயராமன் (68). முன்னாள் ராணுவ வீரர். இவரும், இவரது மனைவி மனோன்மணியும் (62) வெள்ளிக்கிழமை காலை வீட்டிலிருந்து மாரனேரிக்கு மொபெட்டில் புறப்பட்டனர். 
வீட்டு அருகே சென்ற இவர்கள் மீது எதிரே வந்த கார் மோதியது. இதில், பலத்தக் காயமடைந்த ஜெயராமன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 
மனோன்மணி தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து பூதலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

SCROLL FOR NEXT