தஞ்சாவூர்

பேருந்தில் பயணியிடம் 9 பவுன் திருடிய  பெண் கைது

DIN

கும்பகோணத்தில் திங்கள்கிழமை பேருந்தில் பயணியிடம் 9 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் சாலைக்காரத் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முருகதாஸ் (27). கும்பகோணத்துக்கு வந்த இவர் புதிய பேருந்து நிலையத்தில் காட்டுமன்னார்கோவில் நோக்கிச் செல்லும் பேருந்தில் திங்கள்கிழமை ஏறி அமர்ந்தார். அப்போது, இவரது பையில் இருந்த 9 பவுன் தங்கச் சங்கிலி காணாமல்போனது. இதை பேருந்தில் இருந்த அறந்தாங்கியைச் சேர்ந்த சங்கர் மனைவி மரகதம் (47) திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, கும்பகோணம் மேற்கு போலீஸார் வழக்குப் பதிந்து மரகதத்தை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT